நாடளாவிய ரீதியில் இன்று(05) முதல் விசேட சுற்றிவளைப்பு

(FASTNEWS | COLOMBO) – இலங்கையில் மது போதையுடன் வாகனம் ஓட்டும் ஓட்டுநர்களைக் கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்பு இன்றிலிருந்து (05) ஒரு மாதத்திற்கு நடைபெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

போதையை ஒழிக்கும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக முன்னெடுக்கவுள்ள குறித்த நாடளாவிய ரீதியிலான விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் அனைத்துப் பொலிஸாரும் ஈடுபடவுள்ளதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.