(FASTNEWS | COLOMBO) – நாடளாவிய ரீதியில் இன்று(14) இரவு 09.00 மணி முதல் நாளை(15) அதிகாலை 4.00 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கம்பஹா பொலிஸ் பிரிவில் இன்று(14) இரவு 7.00 மணி முதல் நாளை(15) காலை 6.00 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.