(FASTNEWS| COLOMBO) – நாடளாவிய ரீதியில் இம்முறை 92 அன்னதான சாலைகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கியுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தில் 6,000 அன்னதானசாலைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. ஆனால், இம்முறை முதற் தடவையாக 92 அன்னதானசாலைகளை மாத்திரமே பதிவு செய்துள்ளதாகவும், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் மேலும் அறிவித்துள்ளது.