நாடளாவிய ரீதியில் தற்போது இடியுடன் கூடிய மழை..

(FASTNEWS | COLOMBO) – நாடளாவிய ரீதியில் தற்போது இடியுடன் கூடிய மழை பெய்துவருவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த மழையுடன் கூடிய காலநிலையில் மின்னல் மற்றும் இடி ஆகியவற்றிலிருந்து பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் குறித்த நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இன்னும், இன்று(19) காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில், இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.