நாடளாவிய ரீதியில் நாளை முதல் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலை

(FASTNEWS | COLOMBO)- நாட்டில் நாளை(03) முதல் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலை உருவாகவுள்ளதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதனால் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலையில் நாளை(03) முதல் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று(02) காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதன்படி மேல், தென், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாகவும் குறித்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.