எதிர்வரும் 24 ஆம் திகதி பாடசாலை அதிபர்கள் தொழிற்சங்க போராட்டம் ஒன்றில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 24 ஆம் திகதி சுகயீன விடுமுறை எடுத்துக் கொள்ளுமாறு சுமார் 11,000 பாடசாலை அதிபர்களுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
அதிபர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் கொழும்பில் அன்றைய தினம் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கம், அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம், சுயாதீன கல்வி சேவைச் சங்கம் உள்ளிட்டன இணைந்து உருவாக்கியுள்ள அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கக் கூட்டமைப்பினால் குறித்த இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
மேலும், கடந்த 2009 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட அதிபர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல் கடந்த ஆண்டில் வழங்கப்பட்ட அதிபர்களுக்கு உரிய பாடசாலைகளை வழங்குதல் உள்ளிட்டன இந்த கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.