மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கால்லூரியின் நெருக்கடிக்கு நிரந்தர தீர்வொன்றை அரசு வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை எனின் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் நேற்று(11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அதன் செயலாளர் மருத்துவர் ஹரித ஹலுத்கே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னர் அரசாங்கம் உரிய பதிலை வழங்கத் தவறின் இவ்வாறு வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
#rishma..