நாடளாவிய ரீதியில் 136 சாரதிகள் கைது

(FASTNEWS|COLOMBO ) – நேற்று(08) காலை 06 மணி முதல் இன்று(09) காலை 06 மணி வரை 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 136 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஜூலை 5 ஆம் திகதி தொடக்கம் நாடளாவிய ரீதியில் மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்யும் நடவடிக்கைகளில் பொலிசார் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி இதுவரை 7802 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.