நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாக அதுரலிய ரதன தேரர் தெரிவிப்பு…

கட்சி அரசியலில் இருந்து விலகி தாம் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக அதுரலிய ரதன தேரர் அறிவித்துள்ளார்.

தாம் எவ்வித கட்சியிலும் இணைந்து செயற்பட மாட்டேன் எனவும் தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியலில் ஏற்பட்டுள்ள விரக்தி நிலை குறித்து ஊடகவியலார்களை சந்தித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.