நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் பிணையில் விடுதலை.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தனியார் நிறுவனம் ஒன்றின் ரூபா 125 மில்லியன் பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்தமை தொடர்பிலான குற்றச்சாட்டிலேயே நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட மூவர் கடந்த 15ஆம் திகதி நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையிலேயே இன்று கொழும்பு, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போதே நாமல் ராஜபக்ஷ உட்பட மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.