நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவிற்கு பிணை.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

டிபெண்டரில் வந்து, தெமட்டகொடையில் வைத்து இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதாக அவர் மீதும் அவருடைய தனிப்பட்ட பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த 9 பேருக்கு எதிராக குற்றஞ் சாட்டப்பட்டிருந்தது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி எஸ் ரணவக்கவினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.