முல்லைத்தீவில் இருந்து சுமார் 400 கிலோமீற்றர் தொலைவில் மையங் கொண்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த ‘நாடா’ சூறாவளி இந்தியாவின் தமிழகத்தில் தரை தொடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்னும், வங்காளவிரிகுடாவில் உருவாகிய நாடா சூறாவளி, காங்கேசன்துறையில் இருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், குறித்த சூறாவளியின் காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் கடும் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.