நாடு கடத்தப்பட்ட கஞ்சிபான இம்ரான் விமான நிலையத்தில் CID இனால் கைது….

(FASTNEWS |COLOMBO) – துபாயில் மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட குழுவினருடன் கைதான மதூஷின் நெருங்கிய சகா கஞ்சிபான இம்ரானை துபாய் அரசு இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளது.

அதன்படி, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.