நாடு பாதுகாப்பான நிலையில் உள்ளது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தன் மீது கொண்டுள்ள நம்பிக்கையினை எச்சந்தர்ப்பத்திலும் இழக்கும் வகையில் நடந்து கொள்ள மாட்டேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

நேற்று(17) இரவு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், எக்காரணத்திற்காகவும் அரசினை முடக்குவதற்கு முடியாது என்றும், நிலவும் சூழ்நிலையில் பதற்றமடைய வேண்டாம் எனவும் நாடு பாதுகாப்பாக உள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்திருந்தார்.