நாடு பூராகவுமுள்ள தேயிலை தோட்டங்களை பதிவு செய்யும் நடவடிக்கை தற்சமயம் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணி உறுதிப் பத்திரங்களை வழங்குதல், தேயிலை செய்கையாளர்களுக்கான ஆள் அடையாள அட்டை, தேயிலை கொழுந்துக்கான உத்தரவாத விலையை உறுதிப்படுத்தல் போன்றவற்றினை வினைத்திறனான முறையில் மேற்கொள்வதற்கான வாய்ப்பு இதன் மூலம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.