நாடே அனர்த்தத்தில் மூழ்கிய நிலையில் கிரிக்கெட் நிறுவனத்தில் அரைக் கோடி செலவில் பாரிய விருந்துபசாரம்..

நாட்டில் நிலவி வரும் அசாதாரண காலநிலை காரணமாக இதுவரை 169 மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில்; துணை சபாநாயகர் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால ஆகியோரால் கிரிக்கெட் நிறுவனத்தில் கோலாகலமாக விருந்துபசாரம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் அரைக் கோடி செலவில் குறித்த விருந்துபசாரம் நடந்தேறியுள்ளதாகவும், ஹில்டன் ஹோட்டலில் ஒரு சாப்பாட்டுத் தட்டுக்கு ரூ.4000 ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரியவருகிறது.

(rizmira)