நாட்டின் கடற்பரப்பில் கடும் காற்று.. பொதுமக்கள் அவதானம்..

நாட்டின் தென் மற்றும் தென்கிழக்கு கடற்பரப்பில் கடும் காற்று வீசும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேற்குறித்த இந்த பகுதிகளில் மணிக்கு 60 – 80Km வரையிலான வேகத்தில் காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கடற்றொழிலில் ஈடுபடுகின்றவர்கள் அவதானமாக செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை பெய்யக் கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. குறிப்பாக நாட்டின் தென் பகுதியில் 100mm மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.