(FASTNEWS|COLOMBO) – நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலையும், நாட்டின் தென்மேற்குப் பிரதேசங்களில் தற்போது காணப்படும் மழை நிலையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய, மேல், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பிற்பகலிலும் இரவிலும் (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையும்) காற்றுடன் கூடிய நிலையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏனைய பிரதேசங்களில் காற்றின் வேகமானது சடுதியாக மணித்தியாலத்துக்கு (55-65) கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், மத்திய, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.