நாட்டின் சில பிரதேசங்களில் கடும் காற்று…

நாட்டை சுற்றி விசேடமாக மத்திய, வடமத்திய மற்றும் தென்மாகாணங்களில் கடும் காற்று வீசக்கூடும் என்று வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் ஒரளவு மழை பெய்யக்கூடும் எனவும் மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பிரதேசங்களில் காலைவேளைகளில் பனிமூட்டமாக காணப்படும் என்றும் திணைக்களம் இன்று(15) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது