நாட்டின் சில பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை…

நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்திலும் ஓரளவு மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் வடபகுதியில் காலை மற்றும் இரவு வேளைகளில் குளிரான காலநிலை நிலவும் எனவும், சில பகுதிகளில் காலை வேளைகளில் பனியுடன் கூடிய காலநிலை நிலவக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.