நாட்டின் சில மாகாணங்களில் குளிரான காலநிலை…

நாட்டின் பெரும்பாலான இடங்களில் வறட்சியான காலநிலை நிலவும்எனவும் வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் காலை மற்றும் இரவு வேளைகளில் குளிரான காலநிலை நிலவக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் காலை வேளைகளில் உறைபனி நிலவக்கூடும் எனவும் வடமேற்கு மாகாணங்களிலும் மன்னார் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் 40 கிலோமீற்றர் வேகத்திற்கு மேல் காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் சில இடங்களில் காலை வேளைகளில் பனிமூட்டம் நிலவக்கூடும் என்று திணைக்களம் இன்று(21) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.