(FASTNEWS|COLOMBO) நாட்டின் சில மாகாணங்களில் இரவில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மத்திய மலை நாட்டில் சில பிரதேசங்களில் கடும் மழை காரணமாக ஹட்டன் நகரின் பிரதான நகரங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
ஹட்டன் – கொழும்பு வீதியின் சில பகுதி வெள்ள நீரினால் மூழ்கியுள்ளமையினால் 40 நிமிடங்கள் வரை கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.