நாட்டின் சில மாவட்டங்களில் இன்றும்(26) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வட மத்திய மாகாணங்களில் மழை பெய்யக் கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, கம்பஹா, கொழும்பு மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் 50mm இற்கும் அதிகளவில் கண மழை பெய்யக் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.