நாட்டின் பல பகுதிகளில் இன்றும்(31) தொடர்ந்து கடும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும், காலி – மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் அதிகரிக்கத்தக்க காற்று வீசும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேல், சபரகமுவ, தென், மத்திய மாகாணங்கள் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.