(FASTNEWS|COLOMBO) – நாட்டின் சில பகுதிகளில் இன்று மாலையில் அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய சப்ரகமுவ, ஊவா, கிழக்கு, ஆகிய மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் 75 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என மேலும் தெரிவித்துள்ளது.