நாட்டின் மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் இன்று(01) பிற்பகல் 2 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்றும் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மழை அல்லது இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று வீசக்கூடும் எனவும் பொதுமக்களை அவதானமான செயற்படுமாறு திணைக்களம் மேலும் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.