நாட்டின் பல பாகங்களில் இன்று மழையுடன் கூடிய காலநிலை…

நாட்டின் பல பாகங்களில் இன்று(09) மாலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக மேல்மாகாணம், வடமேல், சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மாற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீச்சி பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.