நாட்டின் பல பாகங்களுக்கு 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி

(FASTNEWS|COLOMBO) – எதிர்வரும் 24 மணிநேரத்தில் நாட்டின் பல பாகங்களுக்கு 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி ஏற்படக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 65 கிலோமீற்றராக அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மழையுடனான காலநிலையின் போது பல பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடும் எனவும், பொதுமக்கள் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தியுள்ளது.