நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை…

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று(09) மாலை 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூரியுள்ளது.

சபரகமுவ, மேல், தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 75 தொடக்கம் 100 மில்லி மீட்டர் வரை கடுமையான மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடலோர பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 – 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும் என அத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.