நாட்டின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை..

நாட்டின் மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்ய  கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

யாழ் மாவட்டத்திலும் ஓரளவு மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஊவா மாகாணத்தின் பல பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் புத்தளத்திலிருந்து கொழும்பு , காலி ஊடாக மாத்தறை வரையான கடற்கரையோர பகுதிகளிலும்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.