நாட்டின் பல மாகாணங்களில் சீரான காலநிலை…

நாட்டின் பல மாகாணங்களில் சீரான காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

மேற்கு , சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலைவேளைகளில் பனிமூட்டம் காணப்படக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான ஆழமான கடற்பகுதியின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஏனைய கடற்பரப்பில் சீரான காலநிலை நிலவும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.