நாட்டின் பல மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

மேல் , வடமேல் , சப்ரகமுவ , தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பிற்பகல் 2 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை , மன்னார் தொடக்கம் புத்தளம் மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்பில் மாலை மற்றும் இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிக கடும் காற்று வீசக்கூடும் எனவும் , மின்னலால் ஏற்படும் அனர்த்தங்களை தவிர்த்து அவதானத்துடன் செயர்ப்படும்மாறும் திணைக்களம் பொதுமக்களை கோரியுள்ளது.