நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழையுடன் கூடிய காலநிலை…

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை எதிர்வரும் சில தினங்களுக்கும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

தென்மேற்கு மற்றும் கிழக்கு மாகாணத்திலும் மழை பெய்யக்கூடும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் , காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 75 மில்லி மீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.