நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும்(24) கடும்மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல் ஆகிய மாகாணங்களில் 100 முதல் 150 மில்லிமீற்றர் வரையிலான மழை வீச்சி பதிவாகும் எனவும் திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, காங்கேசந்துறை முதல் புத்தளம், கொழும்பு ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்பில் கடுமையான மழைபெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 18 மாவட்டங்களில் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 840 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.