(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப தன்னால் முடியும் எனவும் அதில் தான் வலுவான நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அல்ஜசீரா அலைவரிசையுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம் பெரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருக்கும் , நாட்டின் பொருளாதாரம் நிலையான, ஸ்திர நிலைக்கு திரும்ப இன்னும் 18 மாதங்கள் ஆகும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.