நாட்டின் எந்த பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கும் கொழும்பில் பிறப்பு சான்றிதழ்…

(FASTNEWS|COLOMBO) நாட்டின் எந்த பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கும் பிறப்பு, திருமணம் அல்லது மரண சான்றிதழ்களை எதிர்வரும் வியாழக்கிழமை முதல் கொழும்பில் பெற்றுக் கொள்ள முடியும் என பதிவாளர் நாயகம் என்.சி.விதானகே தெரிவித்துள்ளார்.

பதிவாளர் திணைக்களத்தின் மாளிகாவத்த மத்திய ஆவண பிரிவிலும் மகரகம ஸ்ரீ ஜெயவர்த்தன கோட்டே மற்றும் தெஹிவள வெள்ளவீதி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இதற்கான வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.