நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த அறுவருக்கு விளக்கமறியல்..

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த இந்தியப் பிரஜைகள் 06 பேர் சிலாபம் பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் 22 – 38 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும், அவர்கள் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டில் ஹோட்டல் உரிமையாளரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஹோட்டல் உரிமையாளர் 28 வயதுடைய முந்தலம் பிரதேசத்தைச் ​சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சிலாபம் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து அடுத்த மாதம் 02ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.