நாட்டில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு…

நாட்டின் பல பகுதிகளில் சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு கடந்த 15 ஆம் திகதி முதல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயுக்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்கப் பெறுவதாகவும் இதனாலேயே தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சமையல் எரிவாயு விற்பனை செய்யும் நிறுவனங்கள் இதனை மறுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.