நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலை காரணமாக பிரதமரின் இந்திய விஜயம் இரத்து…

நாட்டில் நிலவும் அரசியல் அசாதாரண சூழ்நிலை காரணமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ள இருந்த இந்தியாவுக்கான விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவின் ஹைதராபாத் நகரில், எதிர்வரும், 19ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை, உலக தகவல் தொழில்நுட்ப காங்கிரசின் 22 ஆவது மாநாடு நடைபெறவுள்ளது.

குறித்த இந்த மாநாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்க இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rishma..