நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்கிறது.. – மக்கள் அவதானம்..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையில், மேற்கு, சப்ரகமுவ, வடமேல், வடக்கு, காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 100 -150ml மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்குள் 100-150ml அளவு மழை வீழ்ச்சி பதிவாகினால் சில பிரதேசங்களில் மண் சரிவு ஏற்படலாம் என்று அனர்த்த எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

நெலுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் மண் சரிவு ஏற்படும் அபாயம் நிலவுவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

 

(rizmira)