(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஜுலை மாதம் 9ஆம் திகதி ஏற்படுத்திக் கொண்ட தீர்மானத்தின் படி செயற்பட வேண்டும் என பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உறுதியளிக்கப்பட்டபடி புதிய ஜனாதிபதியையும், புதிய பிரதமரையும் உடனடியாகத் தெரிவு செய்ய நடவடிக்கை எடுக்கவும். காலம் செல்லச் செல்ல, தற்போதுள்ள அமைதியின்மை மேலும் மோசமாகிவிடும். அதனால், இலங்கை ஒரு சட்டமற்ற மற்றும் நாடற்ற நாடாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.