நாட்டில் மீளவும் வன்முறைகள் வெடிக்கக்கூடிய அபாயம் – சம்பிக்க எச்சரிக்கை…

நாட்டில் மீளவும் 1988-1989ம் ஆண்டில் இடம் பெற்றதனைப் போன்று வன்முறைகள் வெடிக்கக்கூடிய அபாயம் காணப்படுகின்றதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி இரத்து செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர் தனியார் மருத்துவ கல்லூரியை இரத்து செய்யாவிட்டால் மீளவும் கடந்த காலங்களைப் போன்று வன்முறைகள் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்க பல்கலைக்கழகங்களில் கட்டணம் செலுத்தி கல்வி கற்கக்கூடிய முறைமை உருவாக்கப்பட வேண்டுமென அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

(rizmira)