(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
இந்திய கடன் திட்டத்தின் கீழ் கிடைக்கின்ற இறுதி டீசல் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
40 ஆயிரம் மெட்ரிக்தொன் டீசலுடன் குறித்த கப்பல் வந்தடைந்துள்ளது.
இன்று வந்தடைந்துள்ள கப்பலிலுள்ள டீசலை விநியோகம் செய்வதற்கு இன்னும் 03 நாட்கள் செல்லும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.