நாட்டை விட்டு வெளியேறோம்! – நாமல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

எனக்கோ, எனது தந்தைக்கோ நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வௌியிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,

கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற துரதிஷ்டவசமான நிகழ்வுகள் தொடர்பாக நடைபெறும் எந்தவொரு விசாரணைக்கும் தனது முழு ஒத்துழைப்பை வழங்குவேன் எனவும் தெரிவித்துள்ளார்.