நான்கு நாட்களில் எட்டு கோடி வருமானத்தை வசூலித்த அவன்ட் கார்ட்

அவன்ட் கார்ட் நிறுவனத்தின் பணிகள் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் நான்கு நாட்களில் எட்டு கோடி ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின, அண்மையில் அவன்ட்கார்ட் நிறுவனத்தின் பணிகளை கடற்படையினரிடம் ஒப்படைத்திருந்தார்.

தேசியப் பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வெளிநாட்டு கப்பல்களுக்கு ஆயுதங்களை வழங்குதல் மற்றும் களஞ்சியப்படுத்தல் ஆகிய நடவடிக்கைகளின் மூலம் கடற்படையினர் எட்டு கோடி ரூபா வருமானம் ஈட்டியுள்ளனர்.

கடந்த நான்கு நாட்களில் இவ்வாறு வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக கடற்படைத் தளபதி வைஸ்ட் அட்மிரல் ரவிந்திர விஜேகுணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.