நடிகை ராய் லட்சுமி தான் பாட்டி ஆகி விட்டதாக டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர்,
‘என் வயதையொத்த பெண்கள் எல்லாம் அம்மாவாக இருக்க, நான் இந்த இரண்டு பேருக்கு பாட்டியாகி உள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற சில நடிகைகளைப் போலவே, இவரும் நாய் ஒன்றை தனது மகள் போன்று வளர்த்து வருகிறார். அது இப்போது இரண்டு குட்டிகளைப் போட்டுள்ளது. அந்த பூனைக் குட்டிகளுக்குத் தான் அழகிய பாட்டி ஆகியிருக்கிறார் ராய் லட்சுமி.
இதனால் தற்போது ராய் லட்சுமியின் வீட்டு உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ‘புதிய உறுப்பினர்களின் வரவால் நாங்கள் இப்போது பெரிய குடும்பம் ஆகி விட்டோம்’ என ராய் லட்சுமி இந்தப் பதிவில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.




