நாமலின் கைதை தொடர்ந்து தொடரும் ஆர்ப்பாட்டங்கள்..

ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்து விளக்கமறியலில் வைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தங்கல்லை பிரதேசத்தில் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கூட்டு எதிரணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான நடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.