நாமலின் சுஜானியை அரசு பாதுகாக்கின்றது!

நாமல் ராஜபக்ஸவிற்கு சொந்தமான என்.ஆர். கன்சல்டன் நிறுவனத்தின் பணிப்பாளராக செயற்பட்ட சுஜானி போகொல்லாகமவிற்கு அரசியல் பாதுகாப்பு வழங்குவதாக ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுஜானி போகொல்லாகம குறித்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயற்பட்டுள்ளார்.

சுஜானி, சிகிச்சை பெறுவதற்காக கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையினால் இந்த விவகாரம் தொடர்பில் அறிக்கை வழங்க பொலிஸ் நிலையத்திற்கு முன்னிலையாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சுஜானியை உடனடியாக கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.