ஊழல் எதிர்ப்பு அமைப்பின் செயற்பாட்டாளரான நாமல் குமார என்பவர் ஜனாதிபதி அலுவலக ஊழியராக செயல்பட்டு, மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளாரா என ஆராய ஜனாதிபதி அலுவலகத்தினால் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்ததாகவும், விசாரணைகளில் அவர் ஜனாதிபதி அலுவலகத்தில் சம்பளம் பெறும் ஊழியர் அல்ல என்றும் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாமல் குமார என்பவர் ஜனாதிபதி அலுவலகத்தின் கீழுள்ள போதைப்பொருள் தடுப்பு ஜனாதிபதி பணிக்குழுவில் பணியாற்றியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.