பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் கீழ் போட்டியிட தான் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரது கொலைச் சதி தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்த ஊழல் எதிர்ப்பு அமைப்பின் செயற்பாட்டாளர் நாமல் குமார தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில்;
“மரண சான்றிதழுடன் தான் உள்ள நிலையில் அநேகமானோர் என்னை தேர்தலில் களமிறங்குமாறு ஆதரவு வழங்குகின்றனர். என்னைப் போன்றவர்களது சேவை அவர்களுக்கு முக்கியம் என நானும் எண்ணுகிறேன். ஆதலால் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்க எண்ணியுள்ளேன்..” எனத் தெரிவித்துள்ளார்.